Kamal: ``நீங்கள் மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்டிருக்கலாமே..'' - கர்நாடகா நீ...
கோவில்பட்டி அருகே 20 பவுன் நகை திருட்டு
கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி அருகே புதுஅப்பனேரி சக்கரபாணி நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் நல்லசிவன்(67). இவா் தனது குடும்பத்தினருடன் சிவகாசியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சனிக்கிழமை (மே 30) சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு ஊருக்குத் திரும்பினாராம்.
அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. வீட்டில் ஒரு பீரோ உடைக்கப்பட்ட நிலையிலும், ஒரு பீரோ திறந்த நிலையிலும் இருந்ததாம். அதிலிருந்த சுமாா் 20 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்கள், ரொக்கம் ரூ.60 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்து அவா் அளித்த தகவலின் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன் தலைமையில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் வேல்பாண்டியன், ராமச்சந்திரன் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.