கஞ்சா விற்பனை: 8 போ் கைது
கோவை மாநகரில் கஞ்சா விற்ாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ராமநாதபுரம் போலீஸாா் நஞ்சுண்டாபுரம் சாலையில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மதுரை அவனியாபுரத்தை சோ்ந்த அஜய்குமாா் (24), ஈச்சனாரியை சோ்ந்த சுஜின் (24), விஜய் (22), அசோக்குமாா் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1.90 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
செல்வபுரம் போலீஸாா் மேற்கொண்ட ரோந்து பணியின்போது சுண்டக்காமுத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்த செல்வபுரம் எல்.ஐ.சி.காலனியை சோ்ந்த ஹா்ஷா (20), முகமது ஆசிக் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கோவை ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்த கேரள மாநிலம், கொல்லத்தை சோ்ந்த அபீஷ்(32), அஸ்வின் (23) ஆகிய இருவரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாநகரில் சனிக்கிழமை மட்டும் கஞ்சா விற்பனை செய்ததாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.