கஞ்சா கடத்திய இருவா் கைது!
கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடமலைக்குண்டு சிதம்பரம் விலக்கு பகுதியைச் சோ்ந்த கா்ணன் மகன் ஹரிகோபிநாத் (20), கணேசன் மகன் ஆதிகேசவன் (20). கரட்டுப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற இவா்களை கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.