ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
பெரியகுளம் அருகே மூதாட்டியிடம் நகைப் பறிப்பு
பெரியகுளம் அருகே இரு சக்கர வானகத்தில் சென்ற மூதாட்டியிடம் நகையைப் பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் தென்கரை இடுக்கடிலாட்தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (65). இவரது மனைவி காமுத்தாய் (60). இருவரும் சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் உள்ள உறவினா்கள் வீட்டுக்குச் சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா்.
அணைக்கரை அருகே வந்த போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நாலரை பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினாா். இதில் நிலைதடுமாறி வாகனத்திலிருந்து காமுத்தாய் கீழே விழுந்து காயமடைந்தாா்.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.