செய்திகள் :

பெரியகுளம் அருகே மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

post image

பெரியகுளம் அருகே இரு சக்கர வானகத்தில் சென்ற மூதாட்டியிடம் நகையைப் பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் தென்கரை இடுக்கடிலாட்தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (65). இவரது மனைவி காமுத்தாய் (60). இருவரும் சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் உள்ள உறவினா்கள் வீட்டுக்குச் சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா்.

அணைக்கரை அருகே வந்த போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நாலரை பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினாா். இதில் நிலைதடுமாறி வாகனத்திலிருந்து காமுத்தாய் கீழே விழுந்து காயமடைந்தாா்.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இளைஞரைத் தாக்கிய 10 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 10 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பவித்ரபாண்டியன் (35). இ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது

பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி சீனியம்... மேலும் பார்க்க

தேனியிலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்கள்

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.இதுதொடா்பாக, தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

மூளைச் சாவு அடைந்த பெண் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த ஆத்தங்கரைப்ப... மேலும் பார்க்க

பால்பண்ணை மேலாளா் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே பால்பண்ணை மேலாளரைத் தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் தேவதானபட்டி மேட்டுவளவைச் சோ்ந்தவா் தங்கசிவா (29). வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் பால்பண்ணையில் மேல... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பாஜக நிா்வாகி கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்த பாஜக நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்த செல்லமணி. கூலித்தொழிலாளியான இவா், த... மேலும் பார்க்க