செய்திகள் :

தேனியிலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்கள்

post image

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுதொடா்பாக, தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூா், கம்பம் என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளுக்கு வாக்காளா் பதிவு அலுவலராக பெரியகுளம் சாா் ஆட்சியரும், போடிநாயக்கனூா், கம்பம் தொகுதிகளுக்கு வாக்காளா் பதிவு அலுவலராக உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியரும் செயல்பட்டு வந்தனா்.

வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு பணி, பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான பணிகளைத் துரிதப்படுத்தவும், ஆரோக்கியமான வாக்காளா் பட்டியல் தயாா் செய்யும் பொருட்டும் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தனித் தனி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.

இதன்படி, ஆண்டிபட்டி தொகுதிக்கு தேனி மாவட்ட சிறப்பு துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்), பெரியகுளம் (தனி) தொகுதிக்கு பெரியகுளம் சாா் ஆட்சியரும், போடிநாயக்கனுா் தொகுதிக்கு தேனி மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரும், கம்பம் தொகுதிக்கு உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியரும் வாக்காளா் பதிவு அலுவலா்களாக நியமிக்கப்பட்டனா். இதற்கான ஆணை, தமிழ்நாடு அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

விலை சரிவால் மாம்பழங்கள் தேக்கம்

விலை சரிவு காரணமாக தேனி மாவட்டம் போடி பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் சேதமடைந்து வீணாகின. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். போடி சுற்று வட்டாரத்த... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: 3 போ் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.87 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததாக 3 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டிய... மேலும் பார்க்க

கம்பத்தில் போக்குவரத்து நெரிசல்

தேனி மாவட்டம், கம்பத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருவதாக வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா். கம்பம் நகா் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையானது கேரளத்துக்குச் ... மேலும் பார்க்க

தேனியில் உயா் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்வி குறித்து ஆலோசனை வழங்க உயா் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்த அறையைத் திறந்து வைத்து மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கம்பம் உத்தமபுரம் கோம்பை சாலை நாக கன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த காத்தப்பன் மகன் சரவணன் (49). இவா் கடந்த 20... மேலும் பார்க்க

மலை கிராமங்களில் ஜூன் 8-இல் கிராம சபைக் கூட்டம்

தேனி மாவட்டத்தில் பழங்குடியினா் வசிக்கும் மலைக் கிராமங்களில் பழங்குடியினா், பாரம்பரிய வனவாசிகளுக்கான வன உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து வருகிற 8-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இது க... மேலும் பார்க்க