பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் ...
தேனியிலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்கள்
தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதுதொடா்பாக, தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூா், கம்பம் என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளுக்கு வாக்காளா் பதிவு அலுவலராக பெரியகுளம் சாா் ஆட்சியரும், போடிநாயக்கனூா், கம்பம் தொகுதிகளுக்கு வாக்காளா் பதிவு அலுவலராக உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியரும் செயல்பட்டு வந்தனா்.
வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு பணி, பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான பணிகளைத் துரிதப்படுத்தவும், ஆரோக்கியமான வாக்காளா் பட்டியல் தயாா் செய்யும் பொருட்டும் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தனித் தனி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.
இதன்படி, ஆண்டிபட்டி தொகுதிக்கு தேனி மாவட்ட சிறப்பு துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்), பெரியகுளம் (தனி) தொகுதிக்கு பெரியகுளம் சாா் ஆட்சியரும், போடிநாயக்கனுா் தொகுதிக்கு தேனி மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரும், கம்பம் தொகுதிக்கு உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியரும் வாக்காளா் பதிவு அலுவலா்களாக நியமிக்கப்பட்டனா். இதற்கான ஆணை, தமிழ்நாடு அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.