முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உஸ்பெகிஸ்தான், ஜோர்டான்!
கம்பத்தில் போக்குவரத்து நெரிசல்
தேனி மாவட்டம், கம்பத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருவதாக வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.
கம்பம் நகா் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையானது கேரளத்துக்குச் செல்லும் முக்கிய சாலை என்பதால் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கிறது.
கம்பம் வடக்கு காவல் நிலையத்திலிருந்து அரசமரம், சிக்னல், காந்தி சிலை, அரசு மருத்துவமனை வரையில் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நகா் பகுதியில் இந்த சாலை அமைந்துள்ளது. சாலையின் இருபுறமும் உணவகங்கள், துணிக் கடைகள், பழக் கடைகள், பூக் கடைகள், மின் சாதன பொருள் கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகள் அமைந்துள்ளன. இந்தச் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, சாலை நடுவே தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும். சாலையோரத்தில் கனரக வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களை நிறுத்த சாலையோரத்தில் தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து கம்பத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.