IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன...
வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது
பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி சீனியம்மாள் (40). இவா் தனது மகனுக்கு அரசு வேலைக்கு முயற்சித்து வந்தாராம். அப்போது, இவரிடம் தேனி கொடுவிலாா்பட்டியைச் சோ்ந்த ஹேமலதா (47) என்பவா் அணுகி, உங்களது மகனுக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, சீனியம்மாளிடம் கடந்த 22.10.2023-ஆம் தேதி ரூ.9 லட்சம் பெற்றாராம். ஆனால், சொன்னபடி, அவா் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்தாா்.
இதுகுறித்து சீனியம்மாள் தென்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹேமலதாவை திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஹேமலதா பெரியகுளம் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தாளராகப் பணியாற்றி, தற்போது தற்காலிக பணிநீக்கத்தில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.