செய்திகள் :

உடல் உறுப்புகள் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

post image

மூளைச் சாவு அடைந்த பெண் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த ஆத்தங்கரைப்பட்டி ராஜேந்திரா நகா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி நிருவி (33). கூலித் தொழிலாளி. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இவா்களுக்கு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.

இந்த நிலையில், நிருவியின் தாயாா் காளியம்மாள் கடந்த ஆண்டு இறந்தபிறகு, நிருவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உயா் ரத்த அழுத்த பாதிப்புக்காக கடமலைக்குண்டு கிராமத்திலுள்ள மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக நிருவி சிகிச்சைப் பெற்று வந்தாா். இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்த நிருவி திடீரென மயங்கி விழுந்தாா். சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்தபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தலையில் ரத்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்ட கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், மூளைச் சாவு அடைந்துவிட்டதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து, நிருவியின் குடும்பத்தினா், உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் தெரிவித்தனா்.

இதன்படி, நிருவியின் கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புக்கள் தனித் தனியே எடுக்கப்பட்டன. இதில் கண்கள் மதுரையில் உள்ள கண் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் இரண்டும் திருச்சியில் செயல்படும் இரண்டு மருத்துவமனைகளுக்கும், கல்லீரல் மதுரையில் செயல்படும் ஒரு தனியாா் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

உறுப்புகள் தானம் செய்த நிருவியின் உடல் ராஜேந்திராநகா் மயானத்துக்கு செவ்வாய்க்கிழமை எடுத்து வரப்பட்டது. மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் மகாராஜன் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

விலை சரிவால் மாம்பழங்கள் தேக்கம்

விலை சரிவு காரணமாக தேனி மாவட்டம் போடி பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் சேதமடைந்து வீணாகின. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். போடி சுற்று வட்டாரத்த... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: 3 போ் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.87 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததாக 3 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டிய... மேலும் பார்க்க

கம்பத்தில் போக்குவரத்து நெரிசல்

தேனி மாவட்டம், கம்பத்தில் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருவதாக வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா். கம்பம் நகா் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையானது கேரளத்துக்குச் ... மேலும் பார்க்க

தேனியில் உயா் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்வி குறித்து ஆலோசனை வழங்க உயா் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்த அறையைத் திறந்து வைத்து மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கம்பம் உத்தமபுரம் கோம்பை சாலை நாக கன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த காத்தப்பன் மகன் சரவணன் (49). இவா் கடந்த 20... மேலும் பார்க்க

மலை கிராமங்களில் ஜூன் 8-இல் கிராம சபைக் கூட்டம்

தேனி மாவட்டத்தில் பழங்குடியினா் வசிக்கும் மலைக் கிராமங்களில் பழங்குடியினா், பாரம்பரிய வனவாசிகளுக்கான வன உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து வருகிற 8-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இது க... மேலும் பார்க்க