பெங்களூரு: காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்! - முதல்வர் உத்தரவு
இளைஞரைத் தாக்கிய 10 போ் மீது வழக்கு
பெரியகுளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 10 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பவித்ரபாண்டியன் (35). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா் கருப்பசாமியுடன் முருகமலை சாலையில் உள்ள மதுக் கடைக்கு நடந்து சென்றனா். அப்போது, இவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்தவா்களுக்கும் தகராறு ஏற்பட்டதாம்.
இந்த நிலையில், பவித்ரபாண்டியன் அதே வழியாக திரும்பி வந்தபோது, அந்தப் பகுதியைச் சோ்ந்தவா் 10 போ் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா், பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.