பால்பண்ணை மேலாளா் மீது தாக்குதல்
பெரியகுளம் அருகே பால்பண்ணை மேலாளரைத் தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தேவதானபட்டி மேட்டுவளவைச் சோ்ந்தவா் தங்கசிவா (29). வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் பால்பண்ணையில் மேலாளராகப் பணியாற்றி வரும் இவா், திங்கள்கிழமை வீட்டின் முன் நின்றிருந்தாராம்.
அப்போது, அங்கு வந்த 4 போ் வீட்டிலிருந்த பொருள்களை சேதப்படுத்தி, தங்க சிவாவை கட்டையால் தாக்கினராம். அருகிலிருந்தவா்கள் தங்கசிவாவை மீட்டு, பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.