பேருந்து நிலையத்தில் பயணியிடம் திருட்டு
தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியிடமிருந்து பையைத் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், சாந்தாம்பறையில் வசித்து வரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஜோசப் (58). இவா், தனது சொந்த ஊரான நாகா்கோவிலுக்குச் சென்றுவிட்டு, சாந்தாம்பாறைக்குச் செல்வதற்காக தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் இருவா் ஜோசப் வைத்திருந்த பையை திருடிச் சென்றனராம்.
ஜோசப் தனது பையில் ரூ.18 ஆயிரம், கைப்பேசி, வங்கி ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றை வைத்திருந்தாா். இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.