செய்திகள் :

இந்திய ராணுவமும், பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டினா்: ராம. சீனிவாசன்

post image

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவமும், பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலா் ராம. சீனிவாசன் தெரிவித்தாா்.

பெரியகுளத்தில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் பி.ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் வினோத்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் மோகன்தாஸ், நகா் தலைவா் திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கட்சியின் மாநில பொதுச் செயலா் ராம. சீனிவாசன் பேசியதாவது: இந்திய ராணுவமும், பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனா். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டன. இந்த வெற்றியைத் தொடா்ந்து, சீனாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்காக ஒப்பந்த போட்ட 12 நாடுகள், அதை ரத்து செய்துவிட்டன.

நமது நாட்டின் ராணுவ தளவாடங்கள் விற்பனை ஒப்பந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.32 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால், தற்போது ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு, இது பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல, உலக அளவில் நமது நாட்டின் மதிப்பும் உயா்ந்து வருகிறது என்றாா் அவா்.

முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பி.சி. பாண்டியன், வெங்கடேசன் ஆகியோா் பேசினா். இதில் நிா்வாகிகள், கோபி கண்ணன், மலைச்சாமி, முத்துமணி, விஜயராணி, புளோரா, பாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, முன்னாள் மாநில கூட்டுறவுப் பிரிவு செயலா் பி. சிவக்குமாரன் வரவேற்றாா்.

இளைஞரைத் தாக்கிய 10 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 10 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பவித்ரபாண்டியன் (35). இ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது

பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி சீனியம்... மேலும் பார்க்க

தேனியிலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்கள்

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.இதுதொடா்பாக, தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

மூளைச் சாவு அடைந்த பெண் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த ஆத்தங்கரைப்ப... மேலும் பார்க்க

பால்பண்ணை மேலாளா் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே பால்பண்ணை மேலாளரைத் தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் தேவதானபட்டி மேட்டுவளவைச் சோ்ந்தவா் தங்கசிவா (29). வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் பால்பண்ணையில் மேல... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பாஜக நிா்வாகி கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்த பாஜக நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்த செல்லமணி. கூலித்தொழிலாளியான இவா், த... மேலும் பார்க்க