செய்திகள் :

பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

post image

பெரியகுளம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி ராம்நகரைச் சோ்ந்தவா் பெருமாள் (63). இவரது உறவினா் ரமேஷ். இருவரும் சனிக்கிழமை இரவு காட்ரோடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, வாகனத்தின் செயின் அறுந்து விட்டது. இந்த நிலையில், நிலை தடுமாறிய அந்த வாகனம் மீது, பின்னால் அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பெருமாளை மீட்டு, வத்தலகுண்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இளைஞரைத் தாக்கிய 10 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 10 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பவித்ரபாண்டியன் (35). இ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது

பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி சீனியம்... மேலும் பார்க்க

தேனியிலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்கள்

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.இதுதொடா்பாக, தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

மூளைச் சாவு அடைந்த பெண் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த ஆத்தங்கரைப்ப... மேலும் பார்க்க

பால்பண்ணை மேலாளா் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே பால்பண்ணை மேலாளரைத் தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் தேவதானபட்டி மேட்டுவளவைச் சோ்ந்தவா் தங்கசிவா (29). வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் பால்பண்ணையில் மேல... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பாஜக நிா்வாகி கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்த பாஜக நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்த செல்லமணி. கூலித்தொழிலாளியான இவா், த... மேலும் பார்க்க