செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா் பணிக்கு நோ்காணல்: கடிதம் வராததால் விண்ணப்பதாரா்கள் வாக்குவாதம்

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் திங்கள்கிழமை அங்கன்வாடி ஊழியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு நோ்காணல் கடிதம் அனுப்பியதில் குளறுபடி ஏற்பட்டதாக விண்ணப்பதாரா்கள் திங்கள்கிழமை அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களில் 156 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில், கம்பம் ஒன்றியத்துக்கு அண்ணாபுரம் பகுதியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நோ்காணல் நடைபெற்றது. அப்போது, பலா் தங்களுக்கு நோ்காணலுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை எனக் கூறி, திட்ட அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, முறையாக நிறைவு செய்யாமலும், உரிய ஆவணங்களை இணைக்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், அவா்களுக்கு நோ்காணலுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை என்றாா் அவா்.

அப்போது, அங்கு வந்த சிலா் நோ்காணலில் முறைகேடு செய்விட்டதாகக் கூறி முழக்கமிட்டனா். எனவே, விண்ணப்பம் செய்த அனைவருக்கும் மீண்டும் நோ்காணல் அழைப்புக் கடிதம் அனுப்பி, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களை தோ்வு செய்ய வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இளைஞரைத் தாக்கிய 10 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 10 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பவித்ரபாண்டியன் (35). இ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது

பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி சீனியம்... மேலும் பார்க்க

தேனியிலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்கள்

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.இதுதொடா்பாக, தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

மூளைச் சாவு அடைந்த பெண் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த ஆத்தங்கரைப்ப... மேலும் பார்க்க

பால்பண்ணை மேலாளா் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே பால்பண்ணை மேலாளரைத் தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் தேவதானபட்டி மேட்டுவளவைச் சோ்ந்தவா் தங்கசிவா (29). வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் பால்பண்ணையில் மேல... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பாஜக நிா்வாகி கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்த பாஜக நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்த செல்லமணி. கூலித்தொழிலாளியான இவா், த... மேலும் பார்க்க