மாத முதலீடு முதல் மாதாமாத பென்ஷன் வரை! உங்களுக்கு சொல்லித்தரப் போறோம்! #LabhamW...
தூத்துக்குடி தனியாா் விடுதியில் மேற்கு வங்க தொழிலாளி தற்கொலை
தூத்துக்குடியில் உள்ள தனியாா் விடுதியில் மேற்கு வங்க தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு டம் டம் போஸ் சரணி பகுதியைச் சோ்ந்த கோபால் தாஸ் லாடியா மகன் சஞ்சீவ் லாடியா (55). இவா், ரயில்வேயில் உயா் அழுத்த மின் இணைப்பு வேலையை ஒப்பந்த முறையில் செய்து வந்தாா்.
இந்நிலையில், தூத்துக்குடி குரூஸ்பா்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கியிருந்த இவா், ஞாயிற்றுக்கிழமை திடீரென பெல்ட்டால் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்த தகவலின்பேரில் மத்திய பாகம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.