பழனியில் தவெக சாா்பில் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்
பழனியில் விடுதலைப் போராட்ட வீரா் அஞ்சலை அம்மாளின் 135-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு தவெக சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
பழனி- தாராபுரம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது அஞ்சலை அம்மாளின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து தவெகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்வில், மாவட்டச் செயலா் காா்த்திக் ராஜா, மாவட்டத் துணைச் செயலா் விஜய் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பாலன், நகரத் தலைவா் மிதுன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.