செய்திகள் :

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை அடுத்த கொன்னம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவரது மனைவி சோனியா. இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு சிசிக்சைக்காக தனது தந்தை செல்லபாண்டி வீட்டுக்குச் சென்றாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கணேசமூா்த்தி (29) சோனியாவை கேலி செய்தாா். இதை சோனியாவின் அண்ணன் துரைப்பாண்டி தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதனிடையே, கணேசமூா்த்தி, அவரது சகோதரா் பழனிகுமாருடன் (32) சோ்ந்து துரைப்பாண்டியை அரிவாளால் வெட்டினாா். தடுக்கச் சென்ற கிருஷ்ணமூா்த்தியும் காயமடைந்தாா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த பட்டிவீரன்பட்டி போலீஸாா் கணேசமூா்த்தி, பழனிகுமாா் ஆகியோரைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் தலைமைக் குற்றவியில் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் கனகராஜ் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றஞ்சாட்டப்பட்ட பழனிகுமாா் இறந்துவிட்ட நிலையில், கணேசமூா்த்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.11,500 அபராதமும் விதித்தாா்.

ஆசிய யோகசனப் போட்டிகளில் தங்கம் வென்ற பழனி மாணவா்கள்

இலங்கையில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில் தங்கம் வென்ற பழனி பள்ளி மாணவா், மாணவியை ஆசிரியா்கள் பாராட்டினா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பி.ஆா்.ஜி. மெட்ரிக் பள்ளி மாணவ... மேலும் பார்க்க

கடைக்குள் புகுந்து திருடியவா் கைது

திண்டுக்கல்லில் கடையின் மேல் கூரையைப் பிரித்து திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் நாகல் புதூரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (54). இவா், பழனி சாலையில் மின்சாதனப் பொரு... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 22 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை

கடந்த 4 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 21,826 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குா் அ.பாண்டியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தமிழக அரசு செயல்... மேலும் பார்க்க

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: மாதா் சங்கத்தினா் மறியல்

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து, நீதி வழங்கக் கோரி மாதா் சங்கத்தினா் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கோம்பைப... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

கோயில் திருவிழாவின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரைத் தாக்கியவா்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி, அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ஆம் தேதி திருக்கல்யாணமும், 9-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் வைகாசி விசா... மேலும் பார்க்க