செய்திகள் :

4 ஆண்டுகளில் 22 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை

post image

கடந்த 4 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 21,826 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குா் அ.பாண்டியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தமிழக அரசு செயல்படுத்திய முதலமைச்சரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.17.84 கோடி மானியமாக இடுபொருள்கள் 11,381 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.81 கோடியில் மானியம், இடுபொருள்கள் வழங்கியதன் மூலம் 37,257 விவசாயிகள் பயன் பெற்றனா். மேலும், பருத்தி சாகுபடியை அதிகரிக்கவும், அதன் உற்பத்தியைப் பெருக்கவும், செயல்படுத்தி வரும் பலன்தரும் பருத்தி சாகுபடி திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளாக 5,231 விவசாயிகளுக்கு ரூ.1.13 கோடியில் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

சிறுதானிய இயக்கத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,596 விவசாயிகளுக்கு ரூ.2.23 கோடியில் மானியம், இடுபொருள்கள் வழங்கப்பட்டன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலமாக கடந்த 4 ஆண்டுகளாக 250 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டன. இந்த கிராமங்களில் 64,747 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடியில் இடுபொருள்கள், தென்னங் கன்றுகள், வேளாண் உபகரணங்கள், விசைத் தெளிப்பான்கள் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட்டன. நிகழ் நிதியாண்டில் 50 கிராமங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம், தேசிய உணவு எண்ணெய் இயக்கம், பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், விதை கிராமத் திட்டம் ஆகியவற்றின் கீழ் ரூ.24.65 கோடியில் பணிகள் நடைபெற்றன.

கடந்த 4 ஆண்டுகளில் 21,020 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு 21,826 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டன. 3,242 உர மாதிரிகளும், 4,216 பூச்சி மருந்து மாதிரிகளும் எடுக்கப்பட்டு, தரமான உரம், பூச்சி மருந்துகள் விவசாயிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது என்றாா் அவா்.

உழவா் சந்தைகளில் காய்கறி வசூல்: வியாபாரிகள் அதிருப்தி!

நமது நிருபா்உயா் அதிகாரியின் வீட்டுத் தேவைக்கு எனக் கூறி, உழவா் சந்தை பணியாளா்கள், வாரந்தோறும் காய்கறி வசூலில் ஈடுபடுவதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், ... மேலும் பார்க்க

காளியம்மன் கோயிலில் தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பெரியகலையமுத்தூா் ஐகோா்ட்டு பத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோ... மேலும் பார்க்க

வைப்பு நிதிக்கான பங்களிப்புத் தொகையை உரிய நேரத்தில் செலுத்த அறிவுறுத்தல்

ஊழியா்களுக்கான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான மாதாந்திரப் பங்களிப்புத் தொகையை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக, தொழிலாளா் வருங்கால வைப்... மேலும் பார்க்க

கொங்கா்குளத்தில் மாா்நாடு கருப்பணசுவாமி ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள கொங்கா்குளம் அய்யனாா், மாா்நாடு கருப்பணசுவாமி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசித் திருவ... மேலும் பார்க்க

லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு: 14 போ் பலத்த காயம்

வத்தலகுண்டு அருகே புதன்கிழமை நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா். கரூா் மாவட்டம், நெய்தலூா், திருச்சி மாவட்டம், குளித்தலை பகுதியைச் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, திண்டுக்கல் ம... மேலும் பார்க்க