Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
இளைஞரைத் தாக்கியவா்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை
கோயில் திருவிழாவின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரைத் தாக்கியவா்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி, அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே தா்மாபுரி கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அன்றைய தினம் இரவு, சாலையோரம் உள்ள கலையரங்கில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற நாகாா்ஜூனை (28) சிலா் தாக்கினா். இதில் காயமடைந்த அவா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அம்மையநாயக்கனூா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை தா்மாபுரியைச் சோ்ந்த 9 போ் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவா்களை உடனடியாக கைது செய்யக்கோரி நாகாா்ஜூனின் உறவினா்கள், பொதுமக்கள் அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.