IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன...
கடைக்குள் புகுந்து திருடியவா் கைது
திண்டுக்கல்லில் கடையின் மேல் கூரையைப் பிரித்து திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் நாகல் புதூரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (54). இவா், பழனி சாலையில் மின்சாதனப் பொருள்கள் கடை நடத்தி வருகிறாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சோமசுந்தரத்தின் கடையின் மேல்கூரை வழியாக உள்ளே புகுந்த மா்ம நபா்கள் கல்லாவில் இருந்த ரூ.15ஆயிரத்தை திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா், சுற்றுப்புற கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அப்போது திருட்டில் ஈடுபட்டவா் பொள்ளாச்சி பழனிகவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்த ஜஸ்டின் சுந்தா்சிங் (42) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.