ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
வைகாசி விசாக விழா: பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று கொடியேற்றம்; ஜூன் 9-இல் தேரோட்டம்
பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.55 மணியளவில் கொடியேற்றம் நடைபெறுகிறது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, நாள்தோறும் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துகுமாரசுவாமி தங்கமயில், தங்கக்குதிரை, வெள்ளி யானை, கற்பகவிருட்சம், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு வீதிகளில் உலா வருகின்றனா்.
முக்கிய நிகழ்வாக வரும் 8-ஆம் தேதி இரவு 7 மணியளவில் திருக்கல்யாணமும், 9-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் தேரோட்டமும் நடைபெறுகின்றன. வரும் 12-ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
விழா நாள்களில் கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், கவியரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.