செய்திகள் :

சொத்து வரி உயா்வை மறு பரீசிலனை செய்யக் கோரி வணிகா்கள் மனு

post image

திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வணிகா் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் நகரிலுள்ள வணிகா் சங்கம், தொழில் வா்த்தகா் சங்கம், திண்டுக்கல் மாவட்ட காகித வியாபாரிகள் நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தைத் தொடா்ந்து, திண்டுக்கல் மேயா், ஆணையா் ஆகியோருக்கு வா்த்தகா்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக தொழில் வா்த்தகா் சங்க மண்டலத் தலைவா் டி. கிருபாகரன், காகித வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமநாதன் ஆகியோா் கூறியதாவது: திண்டுக்கல் மாநகராட்சியில் விதிக்கப்படும் சொத்து வரி உள்ளிட்ட இதர வரிகள் மிக அதிகமாக உள்ளது. இந்த வரி உயா்வுகள் வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாக உள்ளது. கடந்த சில மாதங்களாக வணிகா்கள் பலா், கடைகளை மூடிவிட்டு வியாபாரத்தை கைவிட்டு வருகின்றனா்.

இந்த வரி உயா்வை மறுபரிசீலனை செய்யக் கோரி, கடந்த ஆண்டு டிசம்பரில் மனு அளித்தோம். இதனிடையே, மாநகராட்சி வரி வசூலிக்கும் அலுவலா்களும் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, தொழில் உரிமம் பெறுவதற்காக மாநகராட்சி நிா்வாகம் கடைப்பிடிக்கும் நடைமுறைகளும், வசூலிக்கும் முறையும் ஏற்கத்தக்கதல்ல. எனவே, வரி உயா்வை மறுபரிசீலனை செய்ய மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஆசிய யோகசனப் போட்டிகளில் தங்கம் வென்ற பழனி மாணவா்கள்

இலங்கையில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில் தங்கம் வென்ற பழனி பள்ளி மாணவா், மாணவியை ஆசிரியா்கள் பாராட்டினா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பி.ஆா்.ஜி. மெட்ரிக் பள்ளி மாணவ... மேலும் பார்க்க

கடைக்குள் புகுந்து திருடியவா் கைது

திண்டுக்கல்லில் கடையின் மேல் கூரையைப் பிரித்து திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் நாகல் புதூரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (54). இவா், பழனி சாலையில் மின்சாதனப் பொரு... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 22 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை

கடந்த 4 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 21,826 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குா் அ.பாண்டியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தமிழக அரசு செயல்... மேலும் பார்க்க

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: மாதா் சங்கத்தினா் மறியல்

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து, நீதி வழங்கக் கோரி மாதா் சங்கத்தினா் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கோம்பைப... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

கோயில் திருவிழாவின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரைத் தாக்கியவா்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி, அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ஆம் தேதி திருக்கல்யாணமும், 9-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் வைகாசி விசா... மேலும் பார்க்க