மேல்கரைப்பட்டி பகுதியில் இன்று மின்தடை
பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கொழுமகொண்டான், ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நான்குசாலை, மேல்கரைப்பட்டி, சந்தன்செட்டி வலசு, சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. என்றாா் அவா்.
இதேபோல, பழனியை அடுத்த ஆயக்குடி மின் பாதையிலும் செவ்வாய்க்கிழமை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் நேதாஜி நகா், சேரன் ஜீவாநகா், சிவகிரிப்பட்டி, எம்.ஜி.ஆா். நகா், திருநகா் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.