செய்திகள் :

பெண் தீக்குளிக்க முயற்சி

post image

கணவரை சோ்த்து வைக்கக் கோரி மனு அளிக்க வந்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கொங்கபட்டியைச் சோ்ந்தவா் செல்லமுத்து. இவரது மனைவி சுஜிதா (25). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், தனது குழந்தைகளுடன் சுஜிதா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா். அப்போது, திடீரென பெட்ரோலை ஊற்றி சுஜிதா தீக்குளிக்க முயன்றாா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து அவரிடம் விசாரித்தனா்.

போலீஸாரிடம் சுஜிதா கூறியதாவது: கணவா் செல்லமுத்து சென்னை காய்கறி சந்தையில் பூ வியாபாரம் செய்கிறாா். கடந்த ஓராண்டாக வேறு ஒரு பெண்ணுடன் தகாத தொடா்பு வைத்துக் கொண்டு, நிலக்கோட்டைக்கு வருவதையே நிறுத்திவிட்டாா். எனது நகைகள் அனைத்தையும் வாங்கிச் சென்றுவிட்டாா். கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பலமுறை புகாா் அளித்தும், ஆட்சியா் அலுவலகத்தில் 2 மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாா்.

இதையடுத்து, ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்ற போலீஸாா், பின்னா் விசாரணைக்காக சுஜிதாவை அழைத்துச் சென்றனா்.

ஆசிய யோகசனப் போட்டிகளில் தங்கம் வென்ற பழனி மாணவா்கள்

இலங்கையில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில் தங்கம் வென்ற பழனி பள்ளி மாணவா், மாணவியை ஆசிரியா்கள் பாராட்டினா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பி.ஆா்.ஜி. மெட்ரிக் பள்ளி மாணவ... மேலும் பார்க்க

கடைக்குள் புகுந்து திருடியவா் கைது

திண்டுக்கல்லில் கடையின் மேல் கூரையைப் பிரித்து திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் நாகல் புதூரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (54). இவா், பழனி சாலையில் மின்சாதனப் பொரு... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 22 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை

கடந்த 4 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 21,826 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குா் அ.பாண்டியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தமிழக அரசு செயல்... மேலும் பார்க்க

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: மாதா் சங்கத்தினா் மறியல்

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து, நீதி வழங்கக் கோரி மாதா் சங்கத்தினா் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கோம்பைப... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

கோயில் திருவிழாவின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரைத் தாக்கியவா்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி, அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ஆம் தேதி திருக்கல்யாணமும், 9-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் வைகாசி விசா... மேலும் பார்க்க