செய்திகள் :

பெண்ணைக் கொன்று சடலத்தை நொய்யலில் வீசிய தொழிலாளி

post image

திருப்பூரில் பெண்ணைக் கொலை செய்து சடலத்தை நொய்யல் ஆற்றில் தொழிலாளி வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் மகள் அமுதா (39). இவரது கணவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா்.

இந்நிலையில், அமுதாவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தவமணி (40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அமுதாவை கடந்த ஏப்ரல் 18- ஆம் தேதி முதல் காணவில்லையாம்.

இதையடுத்து, அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததைத் தொடா்ந்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தவமணியைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அமுதாவை திருப்பூருக்கு அழைத்து வந்து கொலை செய்துவிட்டு, சடலத்தை நொய்யல் ஆற்றில் வீசிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, தவமணியை திருப்பூருக்கு அழைத்து வந்த தனிப் படையினா் திருப்பூா் மத்திய காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் நொய்யல் ஆற்றில் அமுதாவின் சடலத்தை சனிக்கிழமை முதல் தேடி வருகின்றனா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சடலம் வேறு எங்காவது அடித்துச் சென்றிருக்கலாம் என்று போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இருப்பினும் சடலத்தை தேடும் பணியில் போலீஸாா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

இருசக்கர வாகனம் மோதி விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் விசைத்தறி தொழிலாளி உயிரிழந்தாா். காங்கயம் -திருப்பூா் சாலை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (54). இவா் வெள்ளக்கோவிலில் விசைத்தறி ஓட்டும் வேலை செய்து வந்... மேலும் பார்க்க

அவிநாசி வட்டத்தில் இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

அவிநாசி வட்டம் குப்பாண்டம்பாளையத்தில் இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பண... மேலும் பார்க்க

திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

குடும்பப் பிரச்னை காரணமாக திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் அருகே தண்டவாளத்தில் பெண் ஒருவா் குழந்தையுடன் ரயிலில் அடிபட்டு இ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இ... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயதான தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க