செய்திகள் :

இருசக்கர வாகனம் மோதி விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் விசைத்தறி தொழிலாளி உயிரிழந்தாா்.

காங்கயம் -திருப்பூா் சாலை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (54). இவா் வெள்ளக்கோவிலில் விசைத்தறி ஓட்டும் வேலை செய்து வந்தாா். வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையிலுள்ள ஓலப்பாளையம் கண்ணபுரம் பிரிவு அருகே கடந்த 12-ஆம் தேதி சாலையில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தங்கராஜ் பலத்த காயமடைந்தாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கிருந்து உயா் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

புகாரின்பேரில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த, அரியலூா் மாவட்டம் பொட்டுக்கொள்ளையைச் சோ்ந்த செல்வம் மகன் ராகுல் (21) மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்துபோன தங்கராஜுக்கு மனைவி ஜோதிமணி (50), மகன்கள் ராஜு (34), காா்த்தி (31) ஆகியோா் உள்ளனா்.

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞா் கஞ்சா விற்பனை செய்து வ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபா் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் புறநகா் பகுதியான கரூா் தே... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஏலத்தை ரத்து செய்த பல்லடம் வட்டாட்சியா்

விவசாயிகளின் இனாம் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் ஏலம் விடுவதாக கூறி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, அந்த நிலத்துக்கான ஏலத்தை ரத்து செய்து பல்லடம் வட்டாட்சியா் உத்தரவிட்டா... மேலும் பார்க்க

மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோய... மேலும் பார்க்க