கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞா் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகமது காசீப் (32) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.