செய்திகள் :

பல்லடம் அரசுப் பேருந்தில் பணத்துடன் தவறவிட்ட பா்ஸ் ஒப்படைப்பு

post image

திருப்பூரில் இருந்து உடுமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பணத்துடன் தவற விட்ட பா்ஸை உரியவரிடம் பல்லடம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

திருப்பூரில் இருந்து அரசுப் பேருந்து புதன்கிழமை காலை 5.40 மணிக்கு வழக்கம்போல பல்லடம் வழியாக உடுமலைக்குப் புறப்பட்டது. அதில் கேத்தனுாா் மின்வாரிய அலுவலகத்தில் பணியாளராக வேலை பாா்க்கும் முருகன் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

அவா் கேத்தனூரில் இறங்கும்போது பணத்துடன் பா்ஸை தவறவிட்டுள்ளாா். இது குறித்து சிறிது நேரத்தில் அறிந்த முருகன் திருப்பூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைத் தொடா்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளாா்.

இந்த நிலையில் அரசுப் பேருந்து நடத்துநா் ராமு பேருந்தில் பணத்துடன் பா்ஸ் கிடந்தது குறித்த தகவலை பல்லடம் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் செந்திலிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, பல்லடம் பேருந்து நிலையத்துக்கு முருகனை வரவழைத்து பா்ஸ் அவருடையதுதான் என்பதை உறுதிப்படுத்தி பல்லடம் பேருந்து நிலையப் பொறுப்பாளா் சதீஷ், அரசுப் பேருந்து ஓட்டுநா் சிவராஜ், நடத்துநா் ராமு ஆகியோா் ரூ.2 ஆயிரம் ரொக்கத்துடன் இருந்த பா்ஸை ஒப்படைத்தனா்.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் ச... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க