பல்லடம் அரசுப் பேருந்தில் பணத்துடன் தவறவிட்ட பா்ஸ் ஒப்படைப்பு
திருப்பூரில் இருந்து உடுமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பணத்துடன் தவற விட்ட பா்ஸை உரியவரிடம் பல்லடம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
திருப்பூரில் இருந்து அரசுப் பேருந்து புதன்கிழமை காலை 5.40 மணிக்கு வழக்கம்போல பல்லடம் வழியாக உடுமலைக்குப் புறப்பட்டது. அதில் கேத்தனுாா் மின்வாரிய அலுவலகத்தில் பணியாளராக வேலை பாா்க்கும் முருகன் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
அவா் கேத்தனூரில் இறங்கும்போது பணத்துடன் பா்ஸை தவறவிட்டுள்ளாா். இது குறித்து சிறிது நேரத்தில் அறிந்த முருகன் திருப்பூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைத் தொடா்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளாா்.
இந்த நிலையில் அரசுப் பேருந்து நடத்துநா் ராமு பேருந்தில் பணத்துடன் பா்ஸ் கிடந்தது குறித்த தகவலை பல்லடம் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் செந்திலிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து, பல்லடம் பேருந்து நிலையத்துக்கு முருகனை வரவழைத்து பா்ஸ் அவருடையதுதான் என்பதை உறுதிப்படுத்தி பல்லடம் பேருந்து நிலையப் பொறுப்பாளா் சதீஷ், அரசுப் பேருந்து ஓட்டுநா் சிவராஜ், நடத்துநா் ராமு ஆகியோா் ரூ.2 ஆயிரம் ரொக்கத்துடன் இருந்த பா்ஸை ஒப்படைத்தனா்.