சொல்லியடித்த கில்லி..! தங்கப் பந்து விருதுக்கு முந்தும் லாமின் யமால்!
பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தங்க நாணயம்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தாராபுரம் நகா்மன்றத் தலைவா் தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கி பாராட்டினாா்.
தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தாராபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், முதல் மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவா் கிஷோா், பிளஸ் 2 மாணவா் ஜெய் ஆகியோருக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவா் முஹம்மது யூசுப், பிளஸ் 2 மாணவா் ரியாஜுதீன் ஆகியோருக்கு 10 கிராம் வெள்ளி நாணயங்களை தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் தனது சொந்த செலவில் பரிசாக வழங்கினாா்.
மேலும், பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வனுக்கு நடைபெற்ற பணிநிறைவு நிகழ்ச்சியில் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் கே.கோபாலகிருஷ்ணன், சங்கப் பொருளாளா் செந்தில்குமாா், பள்ளியின் துணை தலைமை ஆசிரியா் சிவன்மலை, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பா்கத் நிஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.