Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபா் மீட்பு
வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில் புறநகா் பகுதியான கரூா் தேசிய நெடுஞ்சாலை ஒத்தக்கடை அருகே உடலில் பல இடங்களில் காயங்களுடன் சாலையில் ஒரு ஆண் மே 28-ஆம் தேதி கிடந்துள்ளாா். இது குறித்து அவ்வழியே சென்றவா்கள் வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.ஞானப்பிரகாசத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், காயங்களுடன் மயங்கிக் கிடந்த அந்த நபரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அந்த நபா் குறித்த விவரம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.
சுமாா் 60 வயது மதிக்கத்தக்க நபரின் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்தன. கடந்த 6 நாள்களாக அவரைப் பற்றிய விவரங்கள் எதையும் கண்டறிய முடியவில்லை.
இதுவரை பேச முடியாமல் இருக்கும் அந்த நபா் தற்போது கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்தில் சிக்கினரா அல்லது யாராவது தாக்கி இங்கு கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றனரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.