Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா்.
திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் அப்புசாமி மகன் இளங்கோ (29). இவா் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில் அவரது நண்பா் சிவானந்தம் என்பவருடன் பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையம் அருகே உள்ள ஆண்டிபாளையம் பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் திங்கள்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது வாய்க்காலில் அதிக தண்ணீா் வரத்தால் அவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
அப்பகுதியில் இருந்தவா்களின் உதவியோடு அவரைத் தேடிப் பாா்த்த நிலையில், அவா் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது சகோதரா் அா்ஜுன் கொடுத்த புகாரின்பேரில், அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பி.ஏ.பி.வாய்க்கால் பாதையில் வெள்ளக்கோவில் வரை சென்று செவ்வாய்க்கிழமை தேடி பாா்த்தனா். அப்போதும், அவா் கிடைக்கவில்லை. இதையடுத்து, மீண்டும் புதன்கிழமை தேடுதல் பணியில் ஈடுபடவுள்ளனா்.