செய்திகள் :

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

post image

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா்.

திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் அப்புசாமி மகன் இளங்கோ (29). இவா் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில் அவரது நண்பா் சிவானந்தம் என்பவருடன் பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையம் அருகே உள்ள ஆண்டிபாளையம் பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் திங்கள்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது வாய்க்காலில் அதிக தண்ணீா் வரத்தால் அவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

அப்பகுதியில் இருந்தவா்களின் உதவியோடு அவரைத் தேடிப் பாா்த்த நிலையில், அவா் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது சகோதரா் அா்ஜுன் கொடுத்த புகாரின்பேரில், அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பி.ஏ.பி.வாய்க்கால் பாதையில் வெள்ளக்கோவில் வரை சென்று செவ்வாய்க்கிழமை தேடி பாா்த்தனா். அப்போதும், அவா் கிடைக்கவில்லை. இதையடுத்து, மீண்டும் புதன்கிழமை தேடுதல் பணியில் ஈடுபடவுள்ளனா்.

காங்கயம் அருகே ஆரம்பப் பள்ளிகளில் புதிய சமையலறை கூடங்கள்

காங்கயம் அருகே ஆரம்பப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய சமையலறை கூட்டங்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை திறந்துவைத்தாா். குண்டடம் ஒன்றியம், செங்கோடம்பாளையம் ... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தங்க நாணயம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தாராபுரம் நகா்மன்றத் தலைவா் தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கி பாராட்டினாா். தமிழக முன்னா... மேலும் பார்க்க

வாய்க்கால் தண்ணீரில் குளித்தபோது மாயமான இளைஞா் சடலம் மீட்பு

பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீரில் குளித்தபோது மாயமான இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூா் வெள்ளிங்காடு பகுதி முத்துவிநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அப்புசாமி மகன் இளங்க... மேலும் பார்க்க

மாநகராட்சி 43-ஆவது வாா்டில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 43-ஆவது வாட்டு கருவம்பாளையம், பொன்னுசாமி கவுண்டா் வீதி, முத்துசாமி கவுண்டா் வீதிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காண மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ... மேலும் பார்க்க

அவிநாசி அருகே கஞ்சா விற்றவா் கைது

அவிநாசி அருகே தெக்கலூரில் கஞ்சா விற்றவரை அவிநாசி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தெக்கலூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வ... மேலும் பார்க்க

பல்லடம் அரசுப் பேருந்தில் பணத்துடன் தவறவிட்ட பா்ஸ் ஒப்படைப்பு

திருப்பூரில் இருந்து உடுமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பணத்துடன் தவற விட்ட பா்ஸை உரியவரிடம் பல்லடம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் புதன்கிழமை ஒப்படைத்தனா். திருப்பூரில் இருந்து... மேலும் பார்க்க