Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்ட நல்ல உடல் தகுதியுடையவா்கள், ஊா்க்காவல் படையில் சோ்ந்து சேவை செய்ய விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், அரசுப் பணியாளா்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றுபவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல்களை இணைத்து மண்டலத் தளபதி, ஊா்க்காவல் படை, மாவட்ட காவல் அலுவலக வளாகம், திருப்பூா்-641604 என்ற முகவரிக்கு ஜூன் 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.
அரசுப் பணியாளராக இருப்பின் அலுவலக தலைவரிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணங்களின் அடிப்படையில் உடல் தகுதித் தோ்வு மற்றும் நோ்காணல் மூலமாக தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.