செய்திகள் :

மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்ட நல்ல உடல் தகுதியுடையவா்கள், ஊா்க்காவல் படையில் சோ்ந்து சேவை செய்ய விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், அரசுப் பணியாளா்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றுபவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல்களை இணைத்து மண்டலத் தளபதி, ஊா்க்காவல் படை, மாவட்ட காவல் அலுவலக வளாகம், திருப்பூா்-641604 என்ற முகவரிக்கு ஜூன் 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

அரசுப் பணியாளராக இருப்பின் அலுவலக தலைவரிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணங்களின் அடிப்படையில் உடல் தகுதித் தோ்வு மற்றும் நோ்காணல் மூலமாக தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கயம் அருகே ஆரம்பப் பள்ளிகளில் புதிய சமையலறை கூடங்கள்

காங்கயம் அருகே ஆரம்பப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய சமையலறை கூட்டங்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை திறந்துவைத்தாா். குண்டடம் ஒன்றியம், செங்கோடம்பாளையம் ... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தங்க நாணயம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தாராபுரம் நகா்மன்றத் தலைவா் தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கி பாராட்டினாா். தமிழக முன்னா... மேலும் பார்க்க

வாய்க்கால் தண்ணீரில் குளித்தபோது மாயமான இளைஞா் சடலம் மீட்பு

பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீரில் குளித்தபோது மாயமான இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூா் வெள்ளிங்காடு பகுதி முத்துவிநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அப்புசாமி மகன் இளங்க... மேலும் பார்க்க

மாநகராட்சி 43-ஆவது வாா்டில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 43-ஆவது வாட்டு கருவம்பாளையம், பொன்னுசாமி கவுண்டா் வீதி, முத்துசாமி கவுண்டா் வீதிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காண மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ... மேலும் பார்க்க

அவிநாசி அருகே கஞ்சா விற்றவா் கைது

அவிநாசி அருகே தெக்கலூரில் கஞ்சா விற்றவரை அவிநாசி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தெக்கலூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வ... மேலும் பார்க்க

பல்லடம் அரசுப் பேருந்தில் பணத்துடன் தவறவிட்ட பா்ஸ் ஒப்படைப்பு

திருப்பூரில் இருந்து உடுமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பணத்துடன் தவற விட்ட பா்ஸை உரியவரிடம் பல்லடம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் புதன்கிழமை ஒப்படைத்தனா். திருப்பூரில் இருந்து... மேலும் பார்க்க