செய்திகள் :

இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! ராணுவத் தலைமை தளபதி ஒப்புதல்

post image

பாகிஸ்தான் மீதான போரில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டது.

பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இருப்பினும், பாகிஸ்தானின் கருத்தை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்தது.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக இந்திய ஆயுதப்படைகளின் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் செய்தி நிறுவனத்திடம் ஜெனரல் அனில் சௌகான் பேசுகையில், தாக்குதலில் விமானங்களின் வீழ்ச்சி எண்ணிக்கை முக்கியம் அல்ல. அவை ஏன் வீழ்த்தப்பட்டன என்பதுதான் முக்கியம். இந்தியாவின் 6 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு.

இதில், நல்ல விஷயம் என்னவென்றால், எங்கள் தவறைச் சரிசெய்து, மீண்டும் அதனைச் செயல்படுத்தி, நீண்ட தூரத்தை இலக்காகக் கொண்டு, அனைத்து ஜெட் விமானங்களையும் மீண்டும் பறக்கவிட்டோம்.

மோதலின்போதும், துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய ஆயுதங்கள் வேலை செய்யவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த அமெரிக்கா உதவியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவரும் கருத்தையும் ஜெனரல் அனில் சௌகான் மறுத்தார்.

4000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்புகள்! கர்நாடகத்தில் இருவர் பலி!

கர்நாடகத்தில் கரோனா நோய்த் தொற்றால் இருவர் பரிதாபமாக பலியாகினர்.மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,700-ஐத் தாண்டியுள்ளது. ... மேலும் பார்க்க

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய... மேலும் பார்க்க

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க