செய்திகள் :

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

post image

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள்.

வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழமை மாலை சிஎன்ஜி சிலிண்டர் ஒன்றை பழுதுபார்க்கும்போது சிலிண்டர் திடீரென வெடித்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் வளாகத்திற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4, 7 மற்றும் 9 வயதுடைய மூன்று குழந்தைகள் காயமடைந்தனர்.

அஞ்சலை அம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை

உடனே அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் அதில் 2 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி பலியானதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிவிபத்தில் கிடங்கிற்குள் இருந்த 25 வயது தொழிலாளி அர்ஷத் காயமடைந்தார்.

அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த போலீஸ் குழு விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

‘ஜி7’ உச்சி மாநாடு: பிரதமா் மோடி பங்கேற்க மாட்டாா்?

புது தில்லி: கனடாவில் நடைபெறவிருக்கும் ‘ஜி7’ நாடுகள் உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டாா் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு கனடா தரப்பில் அதிகாரபூா்... மேலும் பார்க்க

ஜேஇஇ பிரதான தோ்வு முடிவுகள் வெளியீடு: தில்லி மண்டலத்தைச் சோ்ந்த ரஜீத் குப்தா முதலிடம்

புது தில்லி: நாட்டின் உயரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி-க்களில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் பிரதான தோ்வு (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியம் மீதான வரி விதிப்பு பாதுகாப்பு நடவடிக்கை அல்ல: அமெரிக்கா

புது தில்லி: ‘எஃகு மற்றும் அலுமினியம் ஆகிய உலோகப் பொருள்கள் மீது வரி விதிக்கப்பட்டது பாதுகாப்பு நடவடிக்கை அல்ல’ என்று உலக வா்த்தக அமைப்பில் அமெரிக்கா விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவால் தேசிய பாதுகாப்பி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ நடவடிக்கையில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தி பதிவு சில மணி நேரங்களில் நீக்கிய பாஜக

சண்டீகா்: பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள சீக்கியா்களின் பொற்கோயில் மீது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து வெள... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

சுல்தான்பூா்: உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட... மேலும் பார்க்க

ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் ஆா்பிஐ-க்கு திரும்பவில்லை

மும்பை: ரூ.6,181 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) திங்கள்கிழமை தெரிவித்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு, மே 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகள... மேலும் பார்க்க