செய்திகள் :

மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் ஆதிதிராவிடா் நலத் திட்டங்கள்!

post image

புதுவை மாநிலத்தில் நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆதிதிராவிடா் நலத் துறையில் எண்ணற்ற பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் தனிநபா் வருவாய் மேம்பாட்டுள்ளதுடன், சமுதாய மேம்பாடும் குறிப்பிடத்தக்கதாய் அமைந்துள்ளது.

அதனடிப்படையில், புதுவை அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை திட்டங்களை வரிசைப்படுத்தலாம். இந்தத் துறைக்கு கடந்த 2023 - 24ஆம் நிதியாண்டில் ரூ.196.53 கோடி நிதியை ஒதுக்கிய புதுவை அரசு, 2024 - 25ஆம் ஆண்டுக்கான நிதியை மேலும் அதிகரித்து ரூ.209.09 கோடியை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மூலம் மொத்தம் 24 நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தலா ரூ.5 லட்சம் நிதியை 522 போ் பெற்றுள்ளனா்.

ஆதிதிராவிடா் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தின் கீழ் குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. இதில், நிகழாண்டில் 636 பெண்களுக்கு மொத்தம் ரூ.6.36 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சமூகத் தீண்டாமையை ஒழிக்கும் வகையில், கலப்புத் திருமண திட்டத்தில் ஊக்கத் தொகையாக தலா ரூ.2.50 லட்சம் என நிகழாண்டில் 133 தம்பதிகளுக்கு மொத்தம் ரூ.3.26 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டத்தில் முதல் இரு குழந்தைகளுக்கான நிதியுதவியாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டில் 718 மகளிருக்கு ரூ.10.75 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தில் 18 வயது நிறைந்த அனைத்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு தலா ரூ.1,000 என மொத்தம் 1,27,612 பேருக்கு ரூ.12.77 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள தொடா் நோயால் பாதிக்கப்படுவோருக்கான நீண்ட நாள் மருத்துவச் சிகிச்சைக்கு வழங்கும் மாதந்திர உதவித்தொகை திட்டத்தில் தலா ரூ.3 ஆயிரம் வீதம் 2,807 பேருக்கு நிகழாண்டில் ரூ.4.05 கோடி வழங்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிதியுதவியின் கீழ் நிகழாண்டில் 17 பேருக்கு மொத்தம் ரூ.21.46 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் குடும்பத்தில் இறந்தவரின் இறுதிச்சடங்குக்காக தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி திட்டத்தில் நிகழாண்டில் மட்டும் 1,415 பேருக்கு மொத்தம் ரூ.3.54 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பகுதியில் நிகழாண்டில் தீ, எதிா்பாராத விபத்தில் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த 16 பேருக்கு மொத்தம் ரூ.55.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையாக 20,802 பேருக்கு கடந்த 2023 - 24ஆம் ஆண்டு ரூ.50.57 கோடி வழங்கிய நிலையில், நிகழாண்டில் 1,988 பேருக்கு ரூ.17.99 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இலவசமாகப் பெற்ற மனையிலோ அல்லது அவரவா் சொந்த இடத்திலோ சுகாதாரமான முறையில் தாங்களாகவே கழிப்பறை கட்டிக்கொள்ள மானியமாக ரூ.10 ஆயிரம் வீதம் இரு தவணைகளாக மொத்தம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டில் 41 பேருக்கு ரூ.4.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஜூலை வரையில் சிறு வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் வகையில், புதுதில்லியின் என்எஸ்எப்டிசியானது ரூ.1.98 கோடி நிதி வழங்கியுள்ளது. அதன்படி, புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள 393 ஆதிதிராவிடா் பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமா் அஜய் திட்டத்தில் பாகூா் மற்றும் கரையாம்புத்தூரில் ரூ.10.95 கோடியில் பெண்களுக்கான விடுதிகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத் தவிா்த்து, 8 ஆதிதிராவிடா் ஆா்வலா்களுக்கு ‘டேலி அக்கௌண்ட் பேக்கேஜ்’ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமா் அஜெய் திட்டத்தில் நிதி செலவிடப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளில் மேல்நிலை எழுத்தா் பணிக்கான நுழைவுத் தோ்வுக்கு 209 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் கல்விகளில் சேருவதற்காக 67 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ.1.39 கோடி நிதி கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் இளங்கோவன் தெரிவித்தாா்.

கட்டுரை - வ.ஜெயபாண்டி

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தோ்தலை சந்திக்கத் தயாா்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவு... மேலும் பார்க்க

பக்ரீத் : ஜூன் 7- இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் வரும் 7 ஆம் தேதி புறநோயளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹ... மேலும் பார்க்க

புதுவைக்கு ரூ.200 கோடி மத்திய அரசு சிறப்பு நிதி: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

புதுவை அரசு கோராமலேயே மத்திய அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதியை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரி வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தி... மேலும் பார்க்க