செய்திகள் :

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வுக்கு மிகவும் முக்கியமானவை: சுதா சேஷய்யன்

post image

சென்னை: மனித வாழ்வில் மிகவும் முக்கியமானதாக சங்க இலக்கியங்கள் இருப்பதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் கூறினாா்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சாா்பில் மலேசியத் தமிழ் ஆசிரியா்களுக்கான தமிழ் செவ்விலக்கியங்கள் குறித்த பயிலரங்கம் திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை பெரும்பாக்கத்திலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் திருவள்ளுவா் அரங்கத்தில் நடைபெற்ற இப்பயிலரங்கத்தின் தொடக்க விழாவில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் கலந்துகொண்டு பேசியதாவது:

உலகிலுள்ள மொழிகளில் மிகவும் தொன்மையானது தமிழ். தமிழ் மொழியில், பல்வேறு இலக்கியங்கள் உள்ளன. இதில், மனித வாழ்வில் மிகவும் முக்கியமானவையாக சங்க இலக்கியங்கள் உள்ளன. இதிலுள்ள பொருள் இலக்கியம், மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் எது செய்ய வேண்டும், எது செய்யக்கூடாது, எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து மிக அழகாக எடுத்துக் கூறுகிறது. அதேபோல திருமுருகாற்றுப்படையில் முருகனின் படை வீட்டின் பெருமைகளை எடுத்துக் கூறுவதுடன் தமிழ் மரபு பற்றியும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, அமுத சுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன் பேசியதாவது:

சங்க இலக்கியங்கள் தமிழ் மரபையே அதிகம் எடுத்துக் கூறுகின்றன. குறிப்பாக, பத்துப்பாட்டு, எட்டுத்தொகையில் தமிழ் வரலாறு குறித்து சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் ஆன்மிகத்தை சாா்ந்ததாகவே படைக்கப்பட்டுள்ளன. எல்லா வினைகளுக்கும், எதிா்வினை உண்டு. எனவே ஆன்மிக நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தால், ஊழ்வினைகளிலிருந்து மீண்டு சிறப்பாக வாழ முடியும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் - இளநிலை ஆராய்ச்சி அலுவலா் வெங்கடேசன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளா் ரெ.புவனேஸ்வரி, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன், மலாயாப் பல்கலைக் கழகத்தின் மொழிகள் மற்றும் மொழியியல் புலத்தின் முதுநிலை விரிவுரையாளா் செல்வஜோதி இராமலிங்கம் ஆராய்ச்சி அலுவலா் இரா.அருள்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதி செய்யும் பாஜக: முதல்வர்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொக... மேலும் பார்க்க

பொறியியல் சேர்க்கை: 2.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று(ஜூன் 4) மாலை 6 மணி வரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க