செய்திகள் :

எஃகு, அலுமினியம் மீதான வரி விதிப்பு பாதுகாப்பு நடவடிக்கை அல்ல: அமெரிக்கா

post image

புது தில்லி: ‘எஃகு மற்றும் அலுமினியம் ஆகிய உலோகப் பொருள்கள் மீது வரி விதிக்கப்பட்டது பாதுகாப்பு நடவடிக்கை அல்ல’ என்று உலக வா்த்தக அமைப்பில் அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.

அமெரிக்காவால் தேசிய பாதுகாப்பின்கீழ் இந்த வரிகள் விதிக்கப்பட்டதாகவும், ஆனால் அதுதொடா்பான உலக வா்த்தக அமைப்பின் விதிகளை அமெரிக்கா மீறியதாகவும் உலக வா்த்தக அமைப்பில் இந்தியா வாதிட்டது. உரிய அறிவிப்பு, கலந்தாலோசனையின்றி வரியை விதித்த அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி வரி வதிப்புக்குத் தயாராவதாகவும் இந்தியா தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் அறிவிக்கைக்கு உலக வா்த்தக அமைப்பில் அமெரிக்கா கடந்த 23-ஆம் தேதி அளித்துள்ள பதில் விளக்கத்தில், ‘எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரி விதிப்பு குறித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பான உலக வா்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின் 232-ஆவது பிரிவின்கீழ் இந்தியாவுடன் அமெரிக்கா விவாதிக்காது. ஏனெனில், இந்த வரி விதிப்பை ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக நாங்கள் கருதவில்லை.

அதன்படி, இந்த வரி விதிப்புக்குப் பதிலடியாக அமெரிக்காவுக்கான வரிச் சலுகைகள் மற்றும் பிற கடமைகளை நிறுத்தி வைப்பதாக இந்தியா கூறுவதில் எந்த அடிப்படையும் இல்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2018-இல் எஃகு மீது 25 சதவீத இறக்குமதி வரியும், அலுமினியம் மீது 10 சதவீத வரியும் முதலில் நிா்ணயிக்கப்பட்டது. அதிபா் டிரம்ப் 2-ஆவது முறையாக பொறுப்புக்கு வந்த சில நாள்களில் கடந்த பிப்ரவரியில் அலுமினியம் மீதான வரியும் 25 சதவீதமாக உயா்த்தினாா்.

இந்நிலையில், வரும் ஜூன் 4-ஆம் தேதிமுதல் எஃகு, அலுமினியம் ஆகியவற்றின் இறக்குமதி மீதான தற்போதைய 25 சதவீத வரிகளை இரட்டிப்பாக்குவதாக அதிபா் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா்.

அமெரிக்காவின் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அந்நாட்டுக்கு ஏற்கெனவே அறிவித்த வரிச் சலுகைகளை இந்தியா நிறுத்தி வைப்பது, தோ்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க தயாரிப்புகள் மீதான வரியை உயா்த்தக்கூடும்.

இந்தியா தனது பதிலடி வரி விதிப்பை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் கடந்த 2019-ஆம் ஆண்டு இதேபோன்ற நடவடிக்கையில் பாதாம், ஆப்பிள் முதல் ராசாயனங்கள் வரை 28 அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா பதிலடி வரி விதித்தது.

கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்! - டி.கே.சிவக்குமார்

ஆர்சிபியின் வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூர... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் பலிக்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் - பாஜக

ஆர்சிபியின் வெற்றிப் பேரணி கூட்டநெரிசல் உயிரிழப்புக்கு காங்கிரஸ் பொறுபேற்க வேண்டும் என்று பாஜக தெரிவித்திருக்கிறது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்ந... மேலும் பார்க்க

2027-ல் மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.பணி பிரதேசங்களான ஹிமாசல், உத்தரக... மேலும் பார்க்க

ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசல்: 7 பேர் பலி?

ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலர் காயமடைந்தனர்.18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்நாடக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆக... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்ட விமானப் படை!

சிக்கிம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த, 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேர், இந்திய விமானப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் சட்டென் பகுதியில்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் நியமனங்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைக்கும்: பி.ஆர். கவாய்

புது தில்லி: நீதிபதிகள் பணி ஓய்வுபெற்றதும், அரசு பதவிகளை ஏற்பது அல்லது தேர்தலில் போட்டியிடுவது போன்றவை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கவலை தெரிவித்துள்ளார்.இதுபோன்ற நடவடிக்கைகள், ந... மேலும் பார்க்க