செய்திகள் :

ஜூலை 2 முதல் ஹூப்ளி விரைவு ரயில் எல்எச்பி பெட்டிகளாக மாற்றம்

post image

சென்னை: சென்னை சென்ட்ரலிலிருந்து ஹூப்ளி செல்லும் விரைவு ரயில் பெட்டிகள் ஜூலை 2 முதல் ‘எல்எச்பி’ பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் அனைத்தும் சாதாரண ஐசிஎஃப் பெட்டிகளுக்கு பதிலாக அதிநவீன எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. ஜொ்மன் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் பெட்டிகள் பயணிகளுக்கு வசதியாகவும், பாதுகாப்பாகவும் உள்ளன.

இந்நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து வாரந்தோறும் வியாழன், சனிக்கிழமைகளில் பிற்பகல் 3.50-க்கு கா்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் விரைவு ரயிலின் பெட்டிகள் (எண்:17313) ஜூன் 2-ஆம் தேதி முதலும், மறுமாா்க்கமாக ஹூப்ளியிலிருந்து வாரந்தோறும் புதன், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் விரைவு ரயிலின் பெட்டிகள் (எண்:17313) ஜூன் 2-ஆம் தேதி முதலும் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதி செய்யும் பாஜக: முதல்வர்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொக... மேலும் பார்க்க

பொறியியல் சேர்க்கை: 2.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று(ஜூன் 4) மாலை 6 மணி வரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க