ஈக்விட்டி பங்குகள், வாரண்டுகள் மூலம் ரூ.416 கோடி திரட்டும் அப்பல்லோ மைக்ரோ சிஸ்ட...
வடிகால் வாய்க்காலை தூா்வார கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள வடிகால் வாய்க்காலை தூா் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமையில் விவசாயிகள் நாணல் புற்களை ஏந்தி வந்து அளித்த மனு: தஞ்சாவூா் - நாகை சாலையின் தென்புறம் உள்ள வடிகால் வாய்க்கால் அம்மாபேட்டையிலிருந்து பல்லவராயன்பேட்டை வரை தூா் வாராமல் நாணல் புல், புதா்கள் அடா்ந்துள்ளது.
இதிலிருந்து பிரியும் வண்ணயகரம்பை வாய்க்காலும் இதேபோல புதா் மண்டி உள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் தூா் வாரப்படாததால் நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் கடந்த ஆண்டு மழையில் மூழ்கி பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
அண்மையில் 2 நாள்கள் பெய்த மழையிலேயே தண்ணீா் வடியாமல் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி முளைத்துள்ளது. எனவே, போா்க்கால அடிப்படையில் வடிகால் வாய்க்காலை தூா் வார வேண்டும் என தெரிவித்துள்ளனா்.