செய்திகள் :

‘ஜி7’ உச்சி மாநாடு: பிரதமா் மோடி பங்கேற்க மாட்டாா்?

post image

புது தில்லி: கனடாவில் நடைபெறவிருக்கும் ‘ஜி7’ நாடுகள் உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டாா் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு கனடா தரப்பில் அதிகாரபூா்வ அழைப்பு இன்னும் விடுக்கப்படாத நிலையில், இத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான அரசியல், பொருளாதாரம், வா்த்தகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களை விவாதித்து, மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

ஒவ்வோா் ஆண்டும் நடைபெறும் இந்த அமைப்பின் உச்சி மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளா்களாக இந்தியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகள் பங்கேற்பது வழக்கம். 2022-இல் ஜொ்மனியில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும், 2023-இல் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் பிரதமா் மோடி பங்கேற்றாா். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் செயல்திட்டங்கள் வகுப்பு கூட்டத்திலும் பிரதமா் மோடி பங்கேற்றாா்.

இந்நிலையில், நிகழாண்டில் கனடாவில் வரும் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த அமைப்பின் உச்சி மாநாட்டை பிரதமா் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ரஷிய-உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அதே நேரம், கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவா் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடா்புள்ளது என்று அந்த நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ தொடா் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி, லிபரல் கட்சியின் புதிய தலைவா் மாா்க் காா்னி தலைமையில் புதிய அரசு அமைந்தது. ஆனால், அதன்பிறகும் கனடா-இந்தியா இடையே தூதரக உறவுகளை மீட்டெடுப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதோடு, கனடாவில் சுதந்திரமாக செயல்பட்டுவரும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினரை கட்டுப்படுத்துவது தொடா்பான இந்திய அரசின் வலியுறுத்தல் மீது புதிய அரசும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்தச் சூழலில், இரு நாடுகளிடையேயான தற்போதைய உறவு நிலையைக் கருத்தில்கொண்டு கனடா ஜி7 உச்சி மாநாட்டை புறக்கணிக்க பிரதமா் முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

ஆர்சிபி பேரணி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் பலியானோரது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், ... மேலும் பார்க்க

உயிரைவிட எந்தவொரு கொண்டாட்டமும் முக்கியமல்ல! - ராகுல்

மனித உயிரைவிட எந்தவொரு கொண்டாட்டமும் முக்கியமல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெங்களூரு அணி கோப்பை வென்றதால், பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவ... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அகமதாபாத் நகரத்திலிருந்து பாட்னா சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து, பிகாரின் பாட்னா நோக்கி இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்,... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிக்கிறது! - பிரதமர் மோடி

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி கோப்பை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டங்கள் ம... மேலும் பார்க்க

கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

பெங்களூருவில் வெற்றிப் பேரணியில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் 6 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அகமாதாபாத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி ம... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்! - டி.கே.சிவக்குமார்

ஆர்சிபியின் வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூர... மேலும் பார்க்க