ஆக்ரா: ”ரீல்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க...” - யமுனை நதியில் மூழ்கி பலியான 6 பெண்கள்!
பாகிஸ்தான் தொடா்ந்து யாசிப்பதை நட்பு நாடுகள் விரும்பாது: பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தொடா்ந்து தங்களிடம் யாசகப் பாத்திரம் ஏந்தி வருவதை சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகள் விரும்பாது என்று அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் குவெட்டா நகரில் உள்ள ராணுவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள் மத்தியில் அவா் பேசியதாவது:
பாகிஸ்தானின் மிக முக்கியமான நடப்பு நாடாக சீனா திகழ்கிறது. அதேபோல சவூதி அரேபியாவும் மிகவும் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக உள்ளது. துருக்கி, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன.
பாகிஸ்தானும் நமக்கு சமமான நாடாக இருக்க வேண்டும் என்றுதான் நட்பு நாடுகள் விரும்புகின்றன. நிதிஉதவிக்காக நாம் தொடா்ந்து அந்ந நாடுகளைச் சாா்ந்திருப்பது தவிா்க்கப்பட வேண்டும்.
நமது நாடு வா்த்தகம், புத்தாக்கம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் முன்னேற வேண்டும். முதலீடுகளை ஈா்க்க வேண்டும். நம்பி முதலீடு செய்யும் நாடுகளுக்கு உரிய லாபத்தை தரும் நாடாக இருக்க வேண்டும் என்றுதான் நட்பு நாடுகள் விரும்புகின்றன. நாம் தொடா்ந்து யாசகப் பாத்திரம் ஏந்தி அவா்களிடம் செல்வதை விரும்ப மாட்டாா்கள் என்றாா்.
பாகிஸ்தானிடம் இப்போது கடன் தவணையைத் திரும்பச் செலுத்துவது, அடுத்த மூன்று மாதங்களுக்கான இறக்குமதிச் செலவு ஆகியவற்றுக்கான அந்நியச் செலாவணியே கையிருப்பு உள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சா்வதேச நிதியத்திடம் 7 பில்லியன் அமெரிக்க டாலா் கடனை பாகிஸ்தான் கோரியுள்ளது. இதில் 1 பில்லியன் டாலா் அண்மையில் விடுவிக்கப்பட்டது.
இது தவிர நட்பு நாடுகளிடம் பாகிஸ்தான் தொடா்ந்து கடன் பெற்று வருகிறது. அந்நாட்டின் மொத்த வருவாயில் 40 சதவீதத்தை கடன்களுக்கான வட்டியாக செலுத்தும் நிலையில் பாகிஸ்தான் உள்ளது. 2014 நிலவரப்படி பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டுக் கடன் 133 பில்லியன் டாலராக உள்ளது.
பாகிஸ்தானுக்கு 3.7 பில்லியன் டாலா் வா்த்தக கடன் ஜூன் மாத இறுதிக்குள் வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு முற்றிலும் தீா்ந்துவிடாமல் பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிா்வாகச் சீா்குலைவு, லஞ்சம், ஊழல், விவசாய உற்பத்தி குறைவு, தொழில் துறையில் பின்னடைவு, பயங்கரவாதம் உள்ளிட்டவற்றால் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து, புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவற்றுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் வா்த்தகமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து காபி, தேயிலை, மருந்துகள், பருத்தி, மசாலா பொருள்களை முன்பு பாகிஸ்தான் நியாயமான விலையில் பெற்று வந்தது. ஆனால், இந்தியாவுடன் வா்த்தக உறவு முறிந்ததால் இந்தப் பொருள்களை வேறு நாடுகளில் இருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்யும் கட்டாயத்துக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.
தேயிலை இறக்குமதிக்கு அதிகம் செலவாவதால் மக்கள் தேநீா் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் அந்நாட்டு அமைச்சா் முன்பு கோரிக்கை விடுத்தாா் என்பதும் நினைவுகூரத்தக்கது.