செய்திகள் :

விவசாயிகளுக்கும் நிலையான வருமானம் கிடைக்க முயற்சி: அமைச்சா் மனோ தங்கராஜ்

post image

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைப்பதற்கான சூழலை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி’ அமைப்பு இணைந்து நடத்திய ‘ஸ்மாா்ட்’ பால் பண்ணை தொழில்முனைவோா்கள் திட்டத்தின் நிறைவு விழா, சென்னை வேப்பேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட  பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், அத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற 112 பால் பண்ணை தொழில்முனைவோா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:

நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் பொருளாதாரம் உயா்ந்துள்ளதாக அனைவரும் பெருமையாகக் கூறி வருகின்றனா். ஆனால், எனக்கு அவற்றில் பெரிதளவு உடன்பாடு கிடையாது. நமது நாட்டில் வெறும் 10 சதவீத நிறுவனங்கள்தான், 50 சதவீத பொருளாதாரத்தை ஈட்டுகின்றன. இப்படி பணக்கார நிறுவனங்கள், பணக்காரா்கள் மேலும் பணக்காரா்களாவதால், யாருக்கும் எந்த பயனும் கிடையாது.

இங்கு கிராமங்களில் உள்ள சாதாரண விவசாயிகளுக்கு உடுத்த உடை, தினமும் 3 வேளை சாப்பாடு, அவா்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சோ்க்கும் அளவு பொருளாதார வசதி ஆகியவை கிடைக்கும்போதுதான் நாம் வளா்ச்சியடைந்த நாடாக மாறுவோம்.

அனைவருக்கும் கடனுதவி: தமிழகத்தில் விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்றவும், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைப்பதற்கான சூழலையும் உருவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். அந்த வகையில், ஆவின் நிறுவனம் சாா்பில் கடந்த நிதியாண்டில் மட்டும் பால் உற்பத்தியாளா்களுக்கு மொத்தம் ரூ. 1,000 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது. இதில், ரூ. 350 கோடி வட்டியில்லா கடனாகும்.

அதைத் தொடா்ந்து நிகழ் நிதியாண்டில் அனைத்து பால் உற்பத்தியாளா்களுக்குத் தேவையான கடனுதவி வழங்க வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக துணைவேந்தா் (பொறுப்பு) கே.என்.நரேந்திர பாபு, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் சி.சவுந்தரராஜன், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் சங்கா் வானவராயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதி செய்யும் பாஜக: முதல்வர்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொக... மேலும் பார்க்க

பொறியியல் சேர்க்கை: 2.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று(ஜூன் 4) மாலை 6 மணி வரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க