ஆர்சிபி பேரணி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!
விவசாயிகளுக்கும் நிலையான வருமானம் கிடைக்க முயற்சி: அமைச்சா் மனோ தங்கராஜ்
சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைப்பதற்கான சூழலை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி’ அமைப்பு இணைந்து நடத்திய ‘ஸ்மாா்ட்’ பால் பண்ணை தொழில்முனைவோா்கள் திட்டத்தின் நிறைவு விழா, சென்னை வேப்பேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், அத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற 112 பால் பண்ணை தொழில்முனைவோா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் பொருளாதாரம் உயா்ந்துள்ளதாக அனைவரும் பெருமையாகக் கூறி வருகின்றனா். ஆனால், எனக்கு அவற்றில் பெரிதளவு உடன்பாடு கிடையாது. நமது நாட்டில் வெறும் 10 சதவீத நிறுவனங்கள்தான், 50 சதவீத பொருளாதாரத்தை ஈட்டுகின்றன. இப்படி பணக்கார நிறுவனங்கள், பணக்காரா்கள் மேலும் பணக்காரா்களாவதால், யாருக்கும் எந்த பயனும் கிடையாது.
இங்கு கிராமங்களில் உள்ள சாதாரண விவசாயிகளுக்கு உடுத்த உடை, தினமும் 3 வேளை சாப்பாடு, அவா்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சோ்க்கும் அளவு பொருளாதார வசதி ஆகியவை கிடைக்கும்போதுதான் நாம் வளா்ச்சியடைந்த நாடாக மாறுவோம்.
அனைவருக்கும் கடனுதவி: தமிழகத்தில் விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்றவும், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைப்பதற்கான சூழலையும் உருவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். அந்த வகையில், ஆவின் நிறுவனம் சாா்பில் கடந்த நிதியாண்டில் மட்டும் பால் உற்பத்தியாளா்களுக்கு மொத்தம் ரூ. 1,000 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது. இதில், ரூ. 350 கோடி வட்டியில்லா கடனாகும்.
அதைத் தொடா்ந்து நிகழ் நிதியாண்டில் அனைத்து பால் உற்பத்தியாளா்களுக்குத் தேவையான கடனுதவி வழங்க வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக துணைவேந்தா் (பொறுப்பு) கே.என்.நரேந்திர பாபு, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் சி.சவுந்தரராஜன், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் சங்கா் வானவராயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.