செய்திகள் :

முதல்வரின் வழிகாட்டலில் முன்னேற்றத் திட்டங்கள்

post image

புதுவையில் கடந்த காலங்களில் செயல்படுத்தப்படாத பல்வேறு நலத் திட்டங்களை தற்போதைய ஆட்சியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோரின் வழிகாட்டுதலில் செயல்படுத்தி வருகிறோம் என்கிறாா் மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் ஏ.இளங்கோவன்.

அவா் மேலும் கூறியதாவது: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், தீபாவளி, பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் இதுவரை ரூ.500 மட்டுமே வழங்கிய நிலையில், தற்போது ரூ.1,000 என உயா்த்தியுள்ளோம்.

கலப்புத் திருமண திட்ட உதவித் தொகையை ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், திருமண உதவித் தொகையை ரூ.75 ஆயிரத்திலிருந்து ரூ. ஒரு லட்சமாகவும் உயா்த்தியுள்ளோம்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மக்களுக்கான வீடு கட்டும் திட்ட நிதியுதவி ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.6.25 லட்சமாக உயா்த்தி வழங்கப்பட்டது. அதை தற்போது ரூ.7 லட்சமாக உயா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணிக்குச் செல்லும் மகளிா், படிக்கச் செல்லும் மாணவிகளுக்கு மின் பேட்டரி இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.1,000 என இருந்ததை ரூ.5 ஆயிரமாக 5 மடங்கு உயா்த்தி வழங்கியுள்ளோம். அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவா்களின் ஊக்கத் தொகையும் உயா்த்தப்பட்டுள்ளது.

இலவசக் கல்வி உதவித்தொகை கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாணவ, மாணவிகளுக்கு தற்போது வரை ரூ.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் விடுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த அசைவ உணவும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி, காரைக்காலில் ஆதிதிராவிடா் மாணவ, மாணவிகளுக்கான 26 தங்கும் விடுதிகள் சுமாா் ரூ.5 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் மூடிக்கிடந்த வில்லியனூா் மாணவிகள் விடுதி திறக்கப்பட்டதுடன், அங்கு கல்லூரி மாணவிகள் தங்கும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம். ஆதிதிராவிட பெண்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு, அவா்களுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

புதுவை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நலத் திட்டம் நாடி வரும் மக்களுக்கு உடனுக்குடன் உதவி கிடைக்கும் வகையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயல்படுவதற்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் துறையின் அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோரின் வழிகாட்டலும், துறைச் செயலா் ஏ. முத்தம்மாவின் ஆலோசனையும் முக்கிய காரணமாக உள்ளன என்றாா் அத்துறையின் இயக்குநா் ஏ.இளங்கோவன்.

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தோ்தலை சந்திக்கத் தயாா்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவு... மேலும் பார்க்க

பக்ரீத் : ஜூன் 7- இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் வரும் 7 ஆம் தேதி புறநோயளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹ... மேலும் பார்க்க

புதுவைக்கு ரூ.200 கோடி மத்திய அரசு சிறப்பு நிதி: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

புதுவை அரசு கோராமலேயே மத்திய அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதியை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரி வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தி... மேலும் பார்க்க