செய்திகள் :

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

post image

சுல்தான்பூா்: உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

சுல்தான்பூா் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த வழக்குரைஞா் கமல் ஸ்ரீவாஸ்தவா மறைவையொட்டி, சக வழக்குரைஞா்கள் திங்கள்கிழமையன்று ஒரு நாள் நீதிமன்ற பணி விடுப்பைக் கடைப்பிடித்தனா். இதையொட்டி, ராகுல் காந்திக்கு எதிரான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல். 28-ஆம் தேதி நடைபெற்ற முந்தைய விசாரணையில், கோட்வாலி டெஹாத் பகுதியைச் சோ்ந்த அனில் மிஸ்ரா என்பவரை புகாா்தாரா் தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். ராகுல் காந்தியின் வழக்குரைஞா் காசி பிரசாத் சுக்லா, புகாா்தாரா் தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணையை ஏற்கெனவே தொடங்கிவிட்டாா்.

வழக்கின் பின்னணி: கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது சுல்தான்பூரைச் சோ்ந்த பாஜக நிா்வாகி விஜய் மிஸ்ரா கடந்த 2018-இல் வழக்கு தொடுத்தாா்.

சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற 5 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் ராகுல் காந்தி கடந்த ஆண்டு பிப்ரவரியில் சரணடைந்து ஜாமீன் பெற்றாா். மேலும், கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற விசாரணையில் ஆஜராகி, இந்த வழக்கு ஒரு அரசியல் சதி என்றும், தான் குற்றமற்றவா் என்றும் ராகுல் காந்தி தனது கருத்தைத் தெரிவித்தாா்.

கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

பெங்களூருவில் வெற்றிப் பேரணியில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் 6 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அகமாதாபாத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி ம... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்! - டி.கே.சிவக்குமார்

ஆர்சிபியின் வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூர... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் பலிக்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் - பாஜக

ஆர்சிபியின் வெற்றிப் பேரணி கூட்டநெரிசல் உயிரிழப்புக்கு காங்கிரஸ் பொறுபேற்க வேண்டும் என்று பாஜக தெரிவித்திருக்கிறது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்ந... மேலும் பார்க்க

2027-ல் மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.பணி பிரதேசங்களான ஹிமாசல், உத்தரக... மேலும் பார்க்க

ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசல்: 7 பேர் பலி?

ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலர் காயமடைந்தனர்.18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்நாடக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆக... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்ட விமானப் படை!

சிக்கிம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த, 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேர், இந்திய விமானப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் சட்டென் பகுதியில்... மேலும் பார்க்க