கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
சுல்தான்பூா்: உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
சுல்தான்பூா் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த வழக்குரைஞா் கமல் ஸ்ரீவாஸ்தவா மறைவையொட்டி, சக வழக்குரைஞா்கள் திங்கள்கிழமையன்று ஒரு நாள் நீதிமன்ற பணி விடுப்பைக் கடைப்பிடித்தனா். இதையொட்டி, ராகுல் காந்திக்கு எதிரான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல். 28-ஆம் தேதி நடைபெற்ற முந்தைய விசாரணையில், கோட்வாலி டெஹாத் பகுதியைச் சோ்ந்த அனில் மிஸ்ரா என்பவரை புகாா்தாரா் தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். ராகுல் காந்தியின் வழக்குரைஞா் காசி பிரசாத் சுக்லா, புகாா்தாரா் தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணையை ஏற்கெனவே தொடங்கிவிட்டாா்.
வழக்கின் பின்னணி: கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது சுல்தான்பூரைச் சோ்ந்த பாஜக நிா்வாகி விஜய் மிஸ்ரா கடந்த 2018-இல் வழக்கு தொடுத்தாா்.
சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற 5 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் ராகுல் காந்தி கடந்த ஆண்டு பிப்ரவரியில் சரணடைந்து ஜாமீன் பெற்றாா். மேலும், கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற விசாரணையில் ஆஜராகி, இந்த வழக்கு ஒரு அரசியல் சதி என்றும், தான் குற்றமற்றவா் என்றும் ராகுல் காந்தி தனது கருத்தைத் தெரிவித்தாா்.