செய்திகள் :

‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ நடவடிக்கையில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தி பதிவு சில மணி நேரங்களில் நீக்கிய பாஜக

post image

சண்டீகா்: பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள சீக்கியா்களின் பொற்கோயில் மீது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட சமூக ஊடக பதிவை மாநில பாஜக சில மணி நேரங்களில் நீக்கியது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக மத்திய அரசு மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவா்களும், பிற எதிா்க்கட்சித் தலைவரும் தொடா் விமா்சனங்களை முன்வைத்து வரும் சூழலில், பஞ்சாப் மாநில பாஜக இந்தப் பதிவை வெளியிட்டதாகக் கருதப்படுகிறது.

ராணுவ வாகனம் மற்றும் தாக்குதலில் சேதமடைந்த பொற்கோயில் புகைப்படங்களுடன் வெளியிட்ட அந்தப் பதிவில், ‘கடந்த 1984-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பொற்கோயில் மீது அப்போதைய காங்கிரஸ் அரசால் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து தியாகிகளின் குடும்பங்களுக்கும் மாநில பாஜக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது’ என்று குறிப்பிடப்பட்டது. ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருந்த இந்தப் பதிவு, சில மணி நேரங்களில் நீக்கப்பட்டது.

இதற்கிடையே, சீக்கியா்களின் தலைமை மத குரு (அகால் தக்த்) குல்தீப் சிங் கா்கேஜ், இந்த ஜூன் முதல் வாரத்தை ‘தியாக வாரம்’ என வா்ணித்து, ஜூன் 1 முதல் 6-ஆம் தேதி வரை ஒற்றுமை உணா்வோடு தியாகிகளுக்கு மரியாதை செலுத்துமாறு சீக்கிய சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கிய பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் வகையிலும், காலிஸ்தான் அமைப்பின் தலைவரை வெளியேற்றும் வகையிலும் அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி உத்தரவின்படி ‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 500-க்கும் அதிகமான சீக்கிய போராளிகள், பொதுமக்கள், ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனா்.

கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

பெங்களூருவில் வெற்றிப் பேரணியில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் 6 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அகமாதாபாத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி ம... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்! - டி.கே.சிவக்குமார்

ஆர்சிபியின் வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூர... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் பலிக்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் - பாஜக

ஆர்சிபியின் வெற்றிப் பேரணி கூட்டநெரிசல் உயிரிழப்புக்கு காங்கிரஸ் பொறுபேற்க வேண்டும் என்று பாஜக தெரிவித்திருக்கிறது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்ந... மேலும் பார்க்க

2027-ல் மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.பணி பிரதேசங்களான ஹிமாசல், உத்தரக... மேலும் பார்க்க

ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசல்: 7 பேர் பலி?

ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலர் காயமடைந்தனர்.18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்நாடக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆக... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்ட விமானப் படை!

சிக்கிம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த, 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேர், இந்திய விமானப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் சட்டென் பகுதியில்... மேலும் பார்க்க