பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி: இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது!
10-ஆவது முறையாக கிங்ஸ் கோப்பையை வென்ற அல்-இத்திஹாத்..! தொடர் நாயகனாக கரீம் பெஞ்சமா!
சௌதியின் கிங்ஸ் கோப்பையை அல்-இத்திஹாத் கிளப் 10-ஆவது முறையாக வென்று அசத்தியது.
சௌதி அரேபியாவின் பழைமையான போட்டிகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் கோப்பை என்று அழைக்கப்படும் இந்த கிங்ஸ் கோப்பை அரசர்களின் கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் இறுதிப் போட்டியில் அல்-இத்திஹாத் உடன் அல்-காத்சியா மோதியது. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் அல்-இத்திஹாத் வென்றது.
இந்தப் போட்டியில் கரீம் பெஞ்சமா 34, 90+4ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். ஹைஸீம் அவோரா 43ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
முதல் பாதியின் கடைசியில் பெனால்டியில் அல்-காத்சியா அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது. 81ஆவது நிமிஷத்தில் இந்த அணியினருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதால் 10 பேருடனே கடைசி சில நிமிஷங்களை விளையாடியது.
போட்டியின் 80-ஆவது நிமிஷத்தில் அல்-காத்சியா அணியின் ஔபமேயாங் அடித்த கோலை கோல் கீப்பர் சிறப்பாக தடுத்தார்.
61 சதவிகித பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்த அல்-இத்திஹாத் அணி 89 சதவிகித துல்லியமாக பந்தினை பாஸ் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு பேலன் தோர் விருது பெற்ற கரீம் பெஞ்சமா இந்த சீசனின் தொடர் நாயகன் விருது பெற்றார்.
அல்-இத்திஹாத் அணி இந்த சீசனில் சௌதி புரோ லீக்கையும் 10-ஆவது முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.
What a performance pic.twitter.com/njcYI0s8aL
— Al-Ittihad Club (@ittihad_en) May 30, 2025
— Al-Ittihad Club (@ittihad_en) May 30, 2025