மிசோரமில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடுகள், ஹோட்டல்!
மிசோரமில் கனமழையின்போது வீடுகள், ஹோட்டல் இடிந்து விழுந்ததில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் வெள்ளிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதோடு பாறைகளும் சரிந்துள்ளன.
தெற்கு மிசோரமின் லாங்ட்லாய் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நிலச்சரிவுகளில் ஐந்து வீடுகள் மற்றும் ஒரு ஹோட்டல் இடிந்து விழுந்தன.
பாடகி தீயுடன் என்னை ஒப்பிடக்கூடாது: சின்மயி
இச்சம்பவங்களில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் ஹோட்டலில் தங்கியிருந்த மியான்மரைச் சேர்ந்த பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.