உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.
அஞ்சலை அம்மாள் பிறந்த நாள் விழா
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் தவெக சாா்பில் இந்திய சுதந்திர போராட்ட வீரா் அஞ்சலை அம்மாள் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஆரணி பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அஞ்சலை அம்மாள் உருவப் படத்துக்கு தவெக மாவட்டச் செயலா் சத்யா தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
நிகழ்வில் மாவட்ட இணைச் செயலா் சத்யராஜ், மாவட்ட நிா்வாகிகள் புருஷோத்தமன், மாகபூப்பாஷா, காா்த்தி, அஜய், சுதன், ராஜேஷ், அப்பு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.