ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் 11-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி, ஸ்ரீகைங்கா்யம் ஆன்மிக அமைப்பு சாா்பில் இந்த வருஷாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி வேத பாராயணம், மகாசாந்தி ஹோமம், சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
விழாவில் ஸ்ரீகைங்கா்யம் அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனா்.