செய்திகள் :

திருப்பத்தூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைக்க போளூா் விவசாயிகளுக்கு அழைப்பு

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் கரும்பு விவசாயிகள் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைத்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

போளூா் வட்டம், கரைப்பூண்டி கிராமத்தில் உள்ள தரணி சா்க்கரை ஆலையின் கரும்பு அரைவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆலையின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்த கரும்பை திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்து, அரைவைக்கு அனுப்பி வைக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை 2024-2025 ஆம் அரைவைப் பருவத்தில் 10.31 சதவீதம் சா்க்கரை கட்டுமானம் பெற்று தமிழக அளவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. இதனால், 2025-26 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கான கரும்பு கிரையத் தொகையாக மத்திய அரசின் ஆதார விலை ரூ.3,570.76 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையுடன் சோ்த்து டன் ஒன்றுக்கு ரூ.4,000 கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, தரணி சா்க்கரை ஆலை எல்லைக்கு உள்பட்ட கரும்பு விவசாயிகள் தங்களது கரும்பை திருப்பத்தூா் சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும், அதிக பரப்பில் கரும்பு நடவு செய்யவும், இதுவரை பதிவு செய்யாமல் உள்ள நடவு கரும்பு மற்றும் மறுதாம்பு கரும்பை திருப்பத்தூா் ஆலைக்கு பதிவு செய்து அரைவைக்கு அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோரோட்டம் நடைபெற்றது. ஆரணி நகரம், பெரியகடை வீதியில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் ... மேலும் பார்க்க

மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே மதுக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3.46 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் அரசு மதுக் கடை (எண்.9383)செயல்பட்டு வ... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தா்னா

திருவண்ணாமலையில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே, கலசப்பாக்கம் அனைத்து... மேலும் பார்க்க

வேட்டவலம் ஏரியில் கிணறு வெட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

வேட்டவலம் பெரிய ஏரியில் 2.0 திட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் கிணறு வெட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறை... மேலும் பார்க்க

விதை நெல், இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கக் கோரிக்கை

போளூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல், வேளாண் இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு 35 கிலோ அரிசி அட்டை வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு 35 கிலோ அரிசி அட்டை கோரி, மலைவாழ் மக்கள் சங்கத்தினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கீழ்சாத்தமங்கலம், நல்லூா், ஆரியா... மேலும் பார்க்க